பிறக்கும் போதே இறப்பதைப் பற்றி சிந்திப்பதில்லை, வாழ்வைப் பற்றி தான் சிந்திக்கின்றோம்.
ஆனால், இறப்பது நிஜம் என தெரிந்தும், மனித நேயத்தை மறந்து எமக்காக வாழ்வது நியாயமா !
மனிதனாக வாழப்பழகு, உதவி செய்து மற்றவரை உன்னைப்போல் நேசிக்க முயலு,
உன் இனத்தில் அன்பு பாசம் இருந்தால் உதவி செய்!
இறைவன் இருக்கின்றார் தர்மம் வெல்லும் என்பதை நம்பு !
இனி மக்கள் நின்மதியாக வாழ வழி தேடுவோம்.
நாம் இன்னும் ஒற்றாகவில்லை, ஒற்றுமையாகப்பணி செய்யவில்லை, எதையும் சாதிக்கவில்லை என்பதை புலம் பெயர் எந்த அமைப்போ, அல்லது தனி மனிதத் தமிழனோ ஏற்றுக் கொள்ளவேண்டும். காரணம், ஒற்றிமையை நாம் தொலைத்ததால், எமது இனம் படுகுழியில் விழுந்துவிட்டது. தமிழரை தள்ளியது, தவிக்கவிட்டது நாமே, தூக்கிவிட முயலவில்லை, என்பதை உணரவேண்டும். ஒற்றுமைப்பட்டு சாதிக்கத் தெரியாத தமிழ் இனம் நாங்கள் என்பதையாவது ஏற்றுகொள்ளுங்கள்.
உனக்கும் ஒரு கதி வரும் அப்போ முழிப்பாய் தமிழா !
ஈழத்தமிழர்கள் வாழ்த்த வேண்டியவர்கள் இவர்கள் தான்
பொங்கல் வாழ்த்துக்கள்
1. ஈழத்தமிழரின் பிரச்சனையைக் கருத்தில் கொண்டு கொள்கையாகவும் இலட்சியமாகவும் தமிழரின் வாழ்விற்காய் தமிழ் நாட்டுக் களமாக இயங்கும் அண்ணன் சீமான் அவர்களை நாம் வாழ்த்தவேண்டும் ஆதரவு கொடுக்க வேண்டும்
2. தமிழ் நாட்டில் பல தமிழ்ப் பத்திரிகைகள் இருக்கின்றன. அவைகளை வாழ்த்தவேண்டும், அதில் நக்கீரன் பத்திரிகை, ( pepper & salt ) பொப்பர் அன்ட் சால்ட் செய்தி நிறுவனம் என்பவை ஈழத்தமிழர் பற்றி அக்கறையோடு செயல்படுவதை நான் அறிகின்றேன். அவர்களையும் வாழ்த்துவதோடு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும்.
3. புலம் பெயர்ந்த நாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறப்பான பணியாற்றுகின்றது, அதன் பிரதமர் அண்ணர் உருத்திரகுமார் அவர்களைப் பாராட்டுகின்றேன். தமிழ் மக்கள் அனைவரும் உங்கள் ஆதரவைக் கொடுங்கள். அவர்களால் பல பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது இரண்டாவது களம் -புலம் பெயர்ந்த களமாகும்.
4. இலங்கையில் உள்ள தமிழர்கள் மூன்றாவது களமாகும். விக்கினோஸ்வரன் ஜயா கட்சிக்குழுவினர். கஜேந்திரகுமார் அண்ணர் கட்சி குழுவினர் கூட்டணி கட்சியினர் என இவர்கள் ஒன்றிணைந்து தமிழர் நலனுக்காக மட்டுமே உழைக்கவேண்டும். சில தமிழ் கட்சிகள் அரசின் நலனைப் பற்றியும் நிற்பதால் தான் இதுவரை தமிழர் பிரச்சனை தீரவில்லை. இதை அவர்கள் மாற்றியே ஆகவேண்டும். இவர்கள் செயல்படும் வேலைகளுடன் நின்றால், தமிழ் நாடு களம், புலம் பெயர்ந்த களம், இலங்கையில் களம் என மூன்றும் செயல்பட்டால் பலமாகும் வெற்றி உண்டாகும். இவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்
5. ஒன்றுபட்டால் நிற்சயம் வெற்றியை தமிழர் பெறலாம். நாம் அமைதியான வாழ்வைப்பெறலாம். தமிழர் ஒன்றுபட்டு தமிழ் இனத்திற்காக செயல்படவேண்டும். சகல தமிழ் அரசியல்வாதிகளும் இந்திய பிரதமரிடம் தொடர்பு கொண்டு எமது அரசியல் பயணத்தை வெல்லவேண்டும். அரசியல் செய்வதற்கு முன்னர் நோக்கம் கொள்கை உறுதியாக இருக்கவேண்டும். அவ்வாறான சிறந்த இலட்சியத் தலைவர் தான் சிங்கப்பூரின் தந்தை லீக்குவான்யு அவர்கள், இவரே என் அரசியல் சிப்பியாக நான் பார்க்கின்றேன். விடுதலை அடைய சுதந்திரம் பெற உறுதியோடு போராடவேண்டும் அவ்வாறான இலட்சியத் தலைவர்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகுக. மக்களே மூன்று களங்களையும், வளர்ப்பது உங்கள் கடமையே. முதலில் ஒற்றுமை. ஒரே கொள்கை. நோக்கம் இருக்கவேண்டும். மாற்றுக் கருத்தை விட்டுவிடுங்கள். நன்றி
14.01.2021
கவிஞர் எழுத்தாளர் - அருள் தெய்வேந்திரன்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
01.01.2021
உன்னை நேசித்து பிறரை நேசித்து வாழ்க
அதுவே சரியான வாழ்க்கை.
வாழ்க்கை நிரந்திரமில்லை அன்பு நிலையானது
பிறப்பு இறப்பு என்ற இடைவெளிக்குள்
வாழ்க்கை என்ற உறவோடு எமது உயிர் வாழ்கிறது
அன்பு பாசம் காதல் நேசம் என்பவை ஆனந்தமானவை
ஆழ்கடல் போல் நினைவில் அலைமோதுபவை
இறைவனால் சொல்லப்பட்டவை
அம்மாவின் பாசம் வற்றிடுமா ?
ஆண்டவன் எம்மை மறந்திட்டுவாரா ? இல்லை
நீ அன்போடு இருந்தால் சூரியன் போல் நீ நிலைத்திருப்பாய்
நிலையானது அன்பு மட்டும் தான் - அதை மறந்துவிடாதே
பணிவை வளர்த்து பிறரன்பைப் பெற்று
ஏழையின் கண்ணீரைத் துடைத்து
நீயும் வாழ்ந்து மற்றவரையும் வாழவை
இவ்வாண்டு மகிழ்வோடு அன்போடு வாழ்வாய்
வாழ்க நலமுடன்
அருள் தெய்வேந்திரன்
தற்போதய அரசியல் நிலையில் நாம் நின்று பேசுவோம், வழிகாட்டுவோம்
தமிழர்கள் வாழ வழி உண்டு, ஆனால், அதைப்புரியாது நடக்கின்றார்கள்.
இன்று
1. நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் மதிப்பிற்குரிய உருத்திரகுமார் அவர்கள் நல்ல கருத்தை செய்யவேண்டிய 7 நிலைகளைப் பற்றியும் சொல்லியுள்ளார்
2. Pepper & salt நிறுவனர் பத்திரிகையாளர் இன்பா அவர்கள் எமக்காக தமிழ் இனத்திற்காக செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றார்.
3. இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகள் தடுமாறி நிற்கிறார்கள். கதிர்காமரைப் போல் கோடரிக்காம்புகளாக இப்போதும் சுயநலமாக தமிழரை ஏமாற்றும் வேலை நடக்கிறது, சம்பந்தன் ஜயா தொடர்ந்து தப்புச் செய்கிறார் அக்கட்சி அழிவு காலம் வந்துவிடப்போகிறது,
4. விக்கினேஸ்வரன் ஜயா. கஜேந்திரகுமார் அண்ணர் அவர்கள் மற்றய உறுப்பினர்களுடன் தமிழர் விடிவு சம்பந்தமாக முடிவு எடுக்கவேண்டும். இது தமிழர் பிரச்சனை.
5. களம் பல திறக்கிறது, தமிழ் நாடு தேர்தல் அலை. புதிய அமெரிக்க அரசாங்க பதவி ஏற்பு. இந்திய அரசின் நிலை போன்ற புதிய சூழுல் எற்படுகிறது,
6. புலம் பெயர் தமிழரே. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு உங்கள் ஆதரவுக்கரத்தை நீட்டுங்கள்.
காலம் மாறுகின்றது, எமது துன்பம் விலக வழி கிடைக்கவேண்டும். செயல்படுங்கள். நன்றி